தேவையான பொருட்கள் இறால் - 100 கிராம். சோள மாவு - 1/2 டீஸ்பூன். இஞ்சி விழுது - 1 டீஸ்பூன். பூண்டு விழுது - 1 டீஸ்பூன். மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன் வெங்காயத்தாள்-சிறிதளவு. வெங்காயம் - 1 கொத்தமல்லி - சிறிதளவு. சோயா சாஸ் - 1 டீஸ்பூன். சில்லி சாஸ் - 1 டீஸ்பூன். மஞ்சள்தூள் தேவையான அளவு. உப்பு தேவையான அளவு. செய்முறை இறாலை மஞ்சள்தூள் உப்பு சேர்த்து சுத்தம் செய்து வைக்கவும். சோளமாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்துவைக்கவும்.கொத்தமல்லி, வெங்காயத்தாள், வெங்காயம் இவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும்.சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது ஆகியவற்றை வதக்கி இதனுடன் இறாலைச் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.பின்னர் சோயா சாஸ், சில்லி சாஸ், மிளகுத்தூள் ஆகியவற்றை தேவைக்கேற்ப சேர்த்துக்கொள்ளவும். இறால் வெந்ததும் கரைத்து வைத்த சோளமாவை ஊற்றி ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி, வெங்காயத்தாள் சேர்த்து இறக்கவும். இறால் சூப் தயார்.